கந்தா கடம்பா

கந்தா கடம்பா குகா கார்த்திகேயா

வேல் எடுத்த நாயகனே சூரசம்ஹாரா                                                                 (வேல் முருகா .வேல் முருகா வேல் வேல்)

பழனி மலை இருப்பது உந்தன் பண்டாரக்கோலம்

பார்பவர்கள் மனமகிழ்வது உந்தன் ராஜ அலங்காரம்

                              (வேல் முருகா .வேல் முருகா வேல் வேல்)

செந்தூரில் ஆட்சி செய்யும் செந்தில் குமரா

சிங்கார வேலவனே சிக்கல் ஷண்முகா

செந்தூரில் வீற்றிருக்கும் சூரசம்ஹாரா

செய்த பாவம் போக்கவல்ல எங்கள் தோழா

                            (வேல் முருகா .வேல் முருகா வேல் வேல்)

ஆறுபடை வீடுனக்கு கந்கா குமரா

ஆறுதலாய் என்றுமிருப்பாய் எங்கள் கந்தா

உந்தன் புகழ் பாட தோன்றும் உந்தன் வடிவமே

எந்தன் நெஞ்சில் உறைந்தது உந்தன் கந்தக்கோட்டமே

                              (வேல் முருகா .வேல் முருகா வேல் வேல்)

தரணியைக் காப்பவரே தனிகாச்சலா

தடையின்றி உந்தன் நாமம் சொல்ல வரம் தா

தடம்புரண்டு ஓடும் எங்கள் மனநிலைதனையே

சீர்படுத்தி வைக்குதப்பா உந்தன் கருணையே

                            (வேல் முருகா .வேல் முருகா வேல் வேல்)

பால் காவடி

பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி

கந்த காவடி முருக காவடி சந்தன காவடி

 

காவடிகள் ஆடிவரும் கூட்டத்திலே

கந்தா நீ வருவாய் அழகாக மயிலினிலே

 

பக்தர் கூட்டம் ஓடிவரும் மலையினிலே

அய்யா பழமாக நிற்கிறாய் நீ பழனியிலே

 

கந்தசாமி உன்னை கூறும் பொழுதினிலே

எந்தன் கவலையெல்லாம் போனது அந்த கரையினிலே

 

கருணை உள்ளம் கொண்ட உந்தன் அன்பினிலே

கந்தா நான் தவழ்வேன் உந்தன் வீட்டு திண்ணையிலே

 

வாக்கெடுத்து தந்த தெய்வம் வயலூரிலே

எந்தன் கனவில் கூட தெரிவது கந்தன் திருக்கோவிலிலே

 

தினைமாவாய் இனிக்குது உந்தன் திரு நாமம்

கந்தா நான் வருவேன் உன் வாசல் தினம் தோறும்

ஹர ஹர ஹர ஷண்முக நாதா

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஷண்முக நாதா

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஷண்முக நாதா

 

குன்றெல்லாம் விளையாடும் ஷண்முக நாதன்

அவன் வேலேதுத்து விளையாடும் என் உயிர் தோழன்

என் நெஞ்சில் நீங்காத புனிதமானவன் அந்த

வெள்ளயங்கிரி ஈசனுக்கு இஷ்ட பாலகன் ( ஹர ஹர )

 

மாயம் செய்யும் மாதவனோ மாமன் அல்லவா

அதனால் மாயமாக வந்து நம் மனக்குறை தீர்ப்பான்

தாயுமான சுவாமி அவன் தந்தை அல்லவா

அதனால் தாயாக மாறி நம் கவலை போக்குவான் ( ஹர ஹர )

 

பிரம்மனையே சிறை அடைத்த பால ஷண்முகா

எந்தன் பாவங்களை தீர்த்திடவே மயிலில் ஏறிவா

கஜமுகனாம் கணபதிக்கு தம்பியானவா

காத்திடும் உன் வேல் எடுத்து விரைந்து ஓடிவா ( ஹர ஹர )

 

கோடி மக்கள் உந்தன் பக்தர் கோலாகலா

இருப்பின் ஏழை எந்தன் உள்ளத்திலே ஆட்சி செயய்பவா

சிவா சக்தி பிள்ளையாக கயிலை வாழ்பவா

கருணையுடன் எங்களையே காத்து ஆள்பவா ( ஹர ஹர )

ஒரு முறை கண்டால்

ஒரு முறை கண்டாலே என்றுமே மறவாத

அற்புத தெய்வம் என் மணிகண்டனே

அந்த ஹரனார்க்கும் ஹரியார்க்கும் இணைந்த

சக்தியாய் பூலோகம் காண்பது ஓர் பாக்கியமே.

 

பன்னீரால் குளிக்கின்ற பொன் மேனியை

நாங்கள் நெய்யாலே அபிஷேகம் செய்திடுவோம்

பச்சிளம் தளிர் கொண்ட பூ மேனியை நாங்கள்

சந்தன குழம்பாலே நீராட்டுவோம்

 

யோகாசனத்திலே அமர்ந்தவன் பாதத்தில்

மாணிக்க பரல் கொண்ட தண்டை அணிவோம்

அபாயமும் சின்முத்திரை காட்டும் கைகளுக்கு                          

வைரம் பதித்த நல காப்பணிவோம்

 

பக்தனின் குறல் கேட்டு செவி சாய்க்கும் காதிற்க்கு                

ரத்தினத்தினாலே குண்டலங்கள்

அழகனாம் முருகனின் தம்பிக்கு அங்கே

நவ ரத்தினம் பதித்த கீரீடங்கள்

 

படி அளக்கும் பரந்தாமன் மகனுக்கு அங்கே

அரவன பாயச நெய்வேத்தியமே

பஞ்சாக்க்ஷரம் கொண்ட பரமனின் மகனுக்கு

பஞ்சமிருதம் கொண்டு படயலிட்டோம்

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

அழகு அழகு எங்கள் கணபதி அழகு

 

ஐந்து கரத்தில் நிற்க்கும் ஐயன் ஆஹா பேரழகு

ஒற்றைக்கொம்பில் நிற்கும் ஐயன் அழகோ பேரழகு

 

முந்திய தொந்தியில் நிமிர்ந்து நிற்க்கும் ராஜனின் மேனி பேரழகு

பறந்து விரிந்த விசால மார்பில் பூணூல் பேரழகு

 

அருகம் புல்லும் எருக்கமாலை அணிகலனாய் அழகு

பக்தனின் உள்ளம் கவரும் கருணைக் கண்கள் கொள்ளை பேரழகு

 

பக்தர் துயர்தனை துடைக்க விசிறி துருத்தும் அவன் செவி பேரழகு

பெருத்த மேனிக்கு சிறுத்த வாகனம் மூஞ்சுறும் அழகு

 

உலகம் வியக்கும் அழகிர்க்கழகு கணபதியே அழகு ........

under construction.